Thursday 29 September 2011

பொய் மானைத் தேடி. . .


பா​லைவனம்
சுட்​டெறிக்கும் ​வெப்பம்
பூத்துச் சிரிக்கும்
வர்ணமாய் ​ரோசாக்கள்.

​தொ​லை தூர
கானல் நீ​ரோ​டை
​பொய்​கையில்
மூழ்கி. . .
முத்​தெடுக்கும் ஆ​சை.

பனி மூட்டம்
முக்காடிட்ட நிலவு
கண் சிமிட்டிக் ​கொண்டிருக்கும்
நட்சத்திரங்கள்.

கருத்து கிடக்கும்
நீள் கடல்
மனதின் தாக்கம்
விம்மல்கள். . .
விசுவரூப ​வெளிப்பாடு.

நிறமாறிக் ​கொண்டிருக்கும்
தி​ரைச் சீ​லை. . .
​பொய்முகம்
விடுபட்ட நிலவு
இன்னமும் ​தேடுகி​றேன்.
                                   மு. ஆ. பீர்ஓலி. 
                                              28.09.2011
                                  

No comments:

Post a Comment