பாலைவனம்
சுட்டெறிக்கும் வெப்பம்
பூத்துச் சிரிக்கும்
வர்ணமாய் ரோசாக்கள்.
தொலை தூர
கானல் நீரோடை
பொய்கையில்
மூழ்கி. . .
முத்தெடுக்கும் ஆசை.
பனி மூட்டம்
முக்காடிட்ட நிலவு
கண் சிமிட்டிக் கொண்டிருக்கும்
நட்சத்திரங்கள்.
கருத்து கிடக்கும்
நீள் கடல்
மனதின் தாக்கம்
விம்மல்கள். . .
விசுவரூப வெளிப்பாடு.
நிறமாறிக் கொண்டிருக்கும்
திரைச் சீலை. . .
பொய்முகம்
விடுபட்ட நிலவு
இன்னமும் தேடுகிறேன்.
மு. ஆ. பீர்ஓலி.
28.09.2011
No comments:
Post a Comment