ஓரு விதவை பெண் போல்
வெள்ளைத் தாளில்
மட்டுமே
குடியிருந்தவள்
சிறகுகள் தந்து
கவிதையாய் மலர்ந்தாள்.
தற்காலிக
சுய சோகங்கள்
கலைந்தன !
தூது வந்தது . . .
உன் வீட்டு வாசலில்
வந்து
விழுந்து கிடப்பது
அழவைப்பதற்காகவா !
மடியில்
முகம் புதைத்து
அழுவதற்காகவே,
என்ன நினைத்து
எழுதினாளோ
கவிதை வரிகளின்
நயத்தில் . . .
மனதை
தரிசித்துக் கொண்டிருக்கிறேன் . . .
உண்மையை உணராமல்
சிறகுகள்
எங்கோ . . .
தொலை துரத்தில்
இசைத்துக் கொண்டிருந்தது,
மு. ஆ. பீர்ஓலி.
19.09.2011
No comments:
Post a Comment