மலரின் பயணம்...
கார் காலம்
படர்ந்து விரிந்த
மேக சிறகுகள்
சிறைப்பட்டிருக்கும் நிலவு
முறண்பாடுகள்
செதுக்கிய
பரிணாம சுவடுகள்
ஒளியைத் தேடி
ஒரு மலரின்
பயணம் தொடங்கியது
மு . ஆ. பீர்ஒலி
16.09.2011
மலர்கிறது
இரவின் அமைதியில்
உறக்கத்தின் கைசிறையில்
பருவத்தின் மொட்டு
கனவாய் மலர்கிறது
நினைவின் நித்திரையில்
நிசப்த நீள்திரையில்
பரிசத்துச் சுவர்க்கத்தில்ப னி அரும்பு மலர்கிறது
உண்மையின் ஒளிதன்னில்
உணர்ச்சியின் உயிர்த்துடிப்பில்
தூய்மைக் கொடிதன்னில்
தெய்வீகம் மலர்கிறது
வரும்மைத் தழுவல்களில்
வருத்த அழுத்தங்களில்
கண்ணீர்க் கதகதப்பில்
கவிதை மலர்கிறது
மு . ஆ. பீர்ஒலி 16.09.2011
No comments:
Post a Comment