நிலவே !
உன்னை நேசித்த பொழுது
என்னையே
நேசித்தேன். . .
களங்கமற்ற உனதன்பில்
மனதைத் தொலைத்து.
உனக்குள்
நிகழ்ந்த. . .
அந்த வேறுபாடு
வதைத்தது.
எனக்கு. . .
நானே வேறுபட்டேன்.
மலரே !
உந்தன் குளிர்ச்சியை
சுவாசித்தேன். . .
மூர்ச்சையாகிப் போனாய்.
அன்பின் வெளிப்பாடென
மகிழ்ந்து போனேன்
உண்மையை அறியாமல்.
சொப்பணங்களில்
மட்டுமே !..
என்னைக் கண்டு. . .
கண்டு
சுவாசங்கள் உஸ்னமாகி
மூர்ச்சையானாயோ !..
நிஜத்தை தரிசிக்க
மனமின்றி.
என்னையே வெறுத்தேன் . . .
உன்னை நேசித்ததால்.
மு. ஆ. பீர்ஓலி.
29.09.2011
No comments:
Post a Comment