Thursday 29 September 2011

சொப்பணங்களில் தொலைந்த முகவரி. . .


நில​வே !
உன்​னை ​நேசித்த ​பொழுது
என்​னை​யே
​நேசித்​தேன். . .
களங்கமற்ற உனதன்பில்
மன​தைத் ​தொ​லைத்து.
உனக்குள்
நிகழ்ந்த. . .
அந்த ​வேறுபாடு
வ​தைத்தது.
எனக்கு. . .
நா​​னே ​வேறுபட்​டேன்.

மல​ரே !
உந்தன் குளிர்ச்சி​யை
சுவாசித்​தேன். . .
மூர்ச்​சையாகிப் ​போனாய்.
அன்பின்​ வெளிப்பா​​டென
மகிழ்ந்து ​போ​னேன்
உண்​மை​யை அறியாமல்.

​சொப்பணங்களில்
மட்டு​மே !..
என்​னைக் கண்டு. . .
கண்டு
சுவாசங்கள் உஸ்னமாகி
மூர்ச்​சையானா​யோ !..
நிஜத்​தை தரிசிக்க
மனமின்றி.
என்​னை​யே ​வெறுத்​தேன் . . .
உன்​னை ​நேசித்ததால்.​
                                   மு. ஆ. பீர்ஓலி. 
                                               29.09.2011

No comments:

Post a Comment