வசந்த காலம்
மலர்கள்
பூத்துக் குலுங்கின. . .
பார்வைகள்
பயணித்த தூரங்களில்.
வர்ணங்கள்
விழி மலர்களில் சிரித்தன.
இளந் தென்றலில்
வியாபித்து பரவிய
சுகந்தம்
மனதுக்குள்
சில்லென்ற மென்மை.
மலரே !..
உன் அழகு
மென்மையான
அந்த நளினம்?..
தென்றலில் இழைந்து
இனிமையாய். . .
விழி மலர்களில் தேங்கி
பரிணாம சேர்க்கை.
ஆராதனை செய்து
ஆர்ப்பரித்தேன்.
நிஜத்தை
அதன் உண்மையை
நேசித்து. . .
உன்னில் தொலைந்து போனேன்.
முரண்பாடுகள்
நெரிஞ்சிலாய்த் தைத்தது.
நிற வேறுபாடுகள்
மலர்களின் தனித்துவம்.
மலரே !
நீ. . . ஏன் மாறினாய் ?...
உனக்குள்
எத்துனை
வர்ண மாற்றங்கள் ! . .
மாயத் தோற்றம்
நெருடல்கள். . .
நிறமாறிக் கொண்டிருக்கிறாய்
நித்தம். . . நித்தம்.
மு. ஆ. பீர்ஓலி.
28.10.2011