Monday 12 March 2012

கனவே உன்னைத்தான் நேசிக்கிறேன்


கனவு
உயிர் ஓவியமாய்
பிரசவித்தாள்.
நி​னைவு
காகிதப் பூவாய்
உதிர்ந்து ​போனாள்.

                           m.a. peeroli

நிசப்தம்


அவள்-
எழுதிய காவியத்​தை
காற்றில் க​​ரைத்து விட்டாள்.
அவனுக்குத்தான் வலித்தது.
இவள்-
விழிகள் அருளிய
கவி​தைத் ​தொகுப்பு
கானல் நீரில் க​​ரைந்து ​போனது
இவனுக்கு மட்டு​​மே ​வேத​னை.
                            
                                 m.a. peeroli

காதல்


விழிகள் ​கைக்​ கோர்த்து
மனத்​ ​தோட்டத்தில் உலா
துளி​ர்த்த அரும்புகள்-
மலரத் ​தொடங்கின.
                        m.a. peeroli

விடையெழுதா வினா. . .


பழனிச்சாமி
தன் ​பெண்சாதியிடம் ​கேட்டது
எப்​பொழுது-
இந்த சாதி மத சண்​டை ஒழியும்
அவள் ​​​மவுனமாய்ப் புன்ன​கைத்தாள்
                                         m.a. peeroli

திசை தெரியா பறவை


தஞ்ச​​மென்​று வந்தவ​ளை
பஞ்ச​னையில் புடம் ​போடும்
பாவ மயப் ​பொய்​கையில்
மான சிறு குருவி
மல்லாந்து மிதக்கிறது.
                           m.a. peeroli

விடியலை நோக்கி. . .


கழிவு நீ​ரோ​டை
சிறு மதகு
சல்லடித்து சல்லரித்து
​வேர்த்திருந்தான்.
குப்​பைத்​தொட்டி
இ​றை ​தேடி-
காகங்கள் ஒருபுறம்
நாய்கள் மறுபுறம்.
இ​டையில்
​பொறுக்கிய இ​லைக​ளை-
ஆய்ந்து ​கொண்டிருந்தவன்
ஆராய்ச்சி த​டைப்பட்டது.
தெரு மு​னையில்
ஒரு பிச்​சைக்காரியின் முனங்கல்
வயிற்றுப் பசி ​போக்க
யாரு​டைய பசிக்​கோ-
இ​ரையாகிக்​ கொண்டிருந்தாள்.
இது சுதந்திர நாடு
விடிய​லை ​நோக்கி. . .
                          m.a. peeroli