காதல் மலர்கள்
நித்திரை கொண்டிருக்கும்
நீர் பூத்த
இனிமை நினைவுகள் . . .
புகை கவரி கொண்டு வருடுகிறேன்.
தஞ்சமடையும்
ஓவ்வொரு வினாடியும்
அந்த பசுமை நினைவுகள்
வெளிப்பாடு.
புகையரும்புகள்
சுருள் கேசங்களாய்
பிரசவித்தது
பிரிவின் பிரளயத்தை !
தரிசிக்கும்
ஓவ்வொரு முறையும்
நினைவுகள் மட்டும்
எச்சமாய் தேங்கின.
தோகைகளின் வருடல்கள்
சமப்படுத்திய சுவடுகள் . . .
தேகமெங்கும்
விரவிக் கிடக்கும்
பைங்கிளிப் பார்வைகள்.
தோழியாய்
தோள் கொடுத்து
துணையானாய் !..
காந்தள் மென்விரல்கள்
மீட்டிய இதய வீணை
சுருதி சேர்க்க
சென்றதால்
இசைத்த சோக கீதம்.
உருகும்
வெண்மைக் கோலம்
வெள்ளைப் புரவியென
இளமைக் கனவுகள்
உயிர்ப்பித்த நாட்களை
நினைவூட்டுகின்றன . . .
மலர்த் தோட்டம்
மலர்ந்தும் மலராத
அரும்புகள்
பனித்துளியின் சிலிர்ப்பு
புகை கவரி கொண்டு
நினைவுகளை வருடுகிறேன்.
கனல்களாய் . . .
கண்ணீர்த் துளிகள்
நினைவூட்டும் அந்த அழகு
காயப்பட்ட மனது
அல்லி இதழால் அவளுக்கு இசைத்திடடி..
மு. ஆ. பீர்ஓலி.
18.09.2011
No comments:
Post a Comment