கவிதையே !..
ஒரு மரணத்தின்
நிஜத்தை கண்டும்
கலங்க வில்லையே. . .
இந்த பிரபஞ்சம்
தொலைந்த. . .
தேடல்கள்
வடுக்களாய் ஏமாற்றங்கள்.
பொய் முகங்கள்
சமாதியான நிஜங்கள்
சிதைந்து போன
உண்மைகள் . . .
மென் உணர்வுகள்.
தோழியே ! . .
மரணம்
ஒரு நீள் துயிலென
நேசித்தனையோ ! . .
அந்த கரங்களின்
மிருதுவான அனைப்பில்
சுகம் கண்டு.
முன் பனிக்காலம்
புல் வெளி
துயில் கொண்டிருந்த
பனித் திவலைகள்
செங்கதிர்ப் பட்டு
சுவர்க்க பிரவேசம்.
மானே !
உயிர்த் தெழு
அத்துனை கல்லறைகளையும்
தகர்த்து விடு. . .
சுவடுகளின்றி.
நிலவே !
உன்னை மறைத்திருப்பது
மேகக் கூட்டங்கள்தான்
மலையல்ல. . .
மனதிற்குள்
புதைந்தவை அனைத்தும்
நெருஞ்சி முட்கள்தான்.
அனைத்தையும்
கரைத்து விடு. . .
பனித் துளிகளாய்.
நிஜத்தின்
தரிசணங்களை
தேடி… தேடி…
சொப்பணங்களை மட்டுமே
சுவாசித்து. . .
மூர்ச்சை !
படரத் துடிக்கும்
இளந்தளிர். . .
அன்பின் அழுத்தங்கள்
சுவாசங்கள்
தேடல்களாய். . .
மீண்டும் ஒரு பிரசவம்.
மு. ஆ. பீர்ஓலி.
27.09.2011
No comments:
Post a Comment