கழிவு நீரோடை
சிறு மதகு
சல்லடித்து சல்லரித்து
வேர்த்திருந்தான்.
குப்பைத்தொட்டி
இறை தேடி-
காகங்கள் ஒருபுறம்
நாய்கள் மறுபுறம்.
இடையில்
பொறுக்கிய இலைகளை-
ஆய்ந்து கொண்டிருந்தவன்
ஆராய்ச்சி தடைப்பட்டது.
தெரு முனையில்
ஒரு பிச்சைக்காரியின் முனங்கல்
வயிற்றுப் பசி போக்க
யாருடைய பசிக்கோ-
இரையாகிக் கொண்டிருந்தாள்.
இது சுதந்திர நாடு
விடியலை நோக்கி. . .
m.a. peeroli
No comments:
Post a Comment