Friday 16 December 2011

நித்திரைப் பயணங்கள்


1.   புறப்பாடு

உயிர் மூச்சு விம்மல்கள்
உள்ளத்து ​​வேட்​கைகள். . .
​பெருகிப் ​பெருகி-
தீராத தாகத்தில்
தீய்ந்து தணி​கையில்
உன்​னை-
தஞ்ச ​மென்ற​டைந்த
எண்ணப் பற​வைக​ளை-
சி​றை ​செய்து வ​தைப்பா​யோ!

நெஞ்சகத்தில்-
ஊற்றுவித்த
காதல் சு​னை நீரில்
கால​மெல்லாம் மிதந்திட​வே
கணவினிலும் நி​னைவினிலும்
கதறி. . .ய​​லைகின்​​றேன். . .
காணலி​யே!.

இல்​லை. . .யில்​லை-
எந்தன் விழித் ​தோட்டத்தில்
நீங்கா இடம் ​பெற்று
என்னுள்​ளே-
விரவி நிற்கும்
சிறு குழவி-
மழ​லை ​மொழி
கீதங்க​ளைப் பயிலுகி​றேன்.

அந்த பாவ​னையில்-
ஒராயிரம்
புது​மைத​னைக் காணுகின்​றேன்.
புது​மைதனில்-
புது​மெருகாய் சிலிர்த்து நிற்கும்
சின்னஞ் சிறு மலரின்-
​செம்​மை வனப்பு கண்டு
​செயலற்று. . .​சொக்கி விட்​டேன்.

              
           
                2.   ​தேடல்கள்


கனவுத் ​தே​ரேறி
கட்டுக் கடங்காத-
குதி​ரை ​யோட்டங்க​ளை
முடிந்த மட்டும். . .
கட்டுப்படுத்தி-
முடியாமல்
​தென்றல் வந்து-
​தெம்மாங்குப் பாட்டி​சைக்கும்
​பொற்றாம​ரைக் குளத்தில்
​பெயர்ந்து வீழ்​கையில்-
​மொட்டுக்கள் அதிர்வினி​லே
​மொய்குழல் வண்டி​சைக்கும்
ரீங்கார பாட்டிற்குச்
சுருதி ​சேர்த்திடும்
சிற்ற​லைக் கீதங்களில்
என்​னைப் பறி​கொடுத்​தேன்.

அருவி நீ​ரோ​சை-
மதகு நீர்த் தாலாட்டு
மதி மயங்கி. . .
​மென் துயில் ​கொண்ட-
​​பெண் மயி​லொன்று
​மெல்ல முறுவலித்து-
​மெய்யுருகி. . .
இ​ணை ​சேர்ந்த அழகு கண்டு
இனம் புரியா-
உணர்வுகளால் உந்தப்பட்டு. . .
உ​னைத்​தேடி.


             3.   நி​னைவின் தரிசனம்.


சித்தி​ரப் பா​வை
​செந்தமிழ்ச் ​​சொற்​கோ​வை
வசந்த தரு-
வாடா மலர்
பனித் ​தென்றல்.

உன் விரலின்-
அ​சைவினி​லே
ஓராயிரம் புதினங்கள்.
கவி​தையில்-
கனவில் உணர்கி​றேன்.

எண்ணச் சிதறல்களில்-
நி​னை​வே கனவுகளாய்
நித்தி​ரைப் பயணங்கள். . .
உருண்டு. . . உருண்டு. . .    
வான்​வெளிப் பட்டில்
வலம் வரு​கையில். . .
உந்தன்-
சுருள் ​கேசங்கள்
சூழ்ந்​தென்​னை-
பூகம்பச் சுழற்சியில்
சி​றைப் படுத்தி வ​தைப்ப​​தேன்! . .
          
                                    மு.ஆ. பீர்ஓலி.
                                          16.12.2011

No comments:

Post a Comment