மழை பெய்து ஒய்ந்திருந்தது
இந்த சமுதாயத்தின்
சீர் குலைவுகளை-
துடைத்து விட்ட பெருமிதத்தில்.
தன் இழைகளில்
தேங்கியிருந்த-
நீர்த் திவலைகளை
மரங்கள்-
உதிர்த்துக் கொண்டிருந்தன.
அந்தி சாயும் நேரம்
பகல் பொழுதின்
ஆரவாரங்கள்-
ஒடுங்கிக் கொண்டிருந்தன.
தத்தம்-
கூடுகளைத் தேடி. . .
பட்சிகள்.
அவைகளின்-
ஒலிக் கலவைகள்
அந்தப் பிரதேசத்தில்
சஞ்சரித்துக் கொண்டிருந்தன.
நட்சத்திரங்களை-
தோற்கடிக்கும் பிரகாசத்துடன். . .
மின் மினி பூச்சிகள்
ஆங்காங்கே-
வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
நீண்டு கிடந்தது
சமுத்திரம்-
நிசப்த்தமாய்.
கருவறைக்குள்-
மென்மையாய். . .
சலணங்கள்.
பொளர்னமி இரவு
நிலவின்-
பரிணாமத் தோற்றம்.
நீ. . . நான். . .
அந்த நிலவு.
உந்தன் உணர்வுகள்
எனக்குள்-
இழைந்து கிடந்தன.
சுவாசத்தை-
உயிர்ப்பித்த மூச்சுக்காற்று.
உச்சத்தின்-
விளிம்பில். . .
பரவசத்தின் உயிர்த்துடிப்பு.
நீண்டு விரிந்த
மேகக் கரங்கள்.
பிரசவித்த-
அலைப் பூக்கள்.
நிஜங்களின்-
தரிசணங்கள்
சங்கமித்துக் கொண்டிருந்தன.
நீ. . . நான். . .
அந்த நிலவு.
புதிதாய்ப் பிரசவித்தோம்.
மு.ஆ. பீர்ஒலி.
10.12.2011
No comments:
Post a Comment