மங்கிய-
தெரு விளக்கில்
சிதறிய நாணயங்களை
பார்த்துப் பார்த்து. . .
அவன்-
சோர் வடைந்திருந்தான்.
விழிகளில்-
காதல் மட்டுமே
வியாபித்திருக்க. . .
பக்கத்தில்-
அவன் மனைவி.
மடியில்-
வற்றிய மார்பகங்களை
ஏகத்துடன்-
வெறித்து நோக்கிய
இவள் குழந்தை.
அருகில்-
சிறு குருவிகளின்
இன்னிசை கீதங்கள். . .
சன்னமாய்.
அன்னாந்து பார்த்தாள்.
கூட்டிற்கு திரும்பிய
தாய்ப் பறவை-
நளினமய் இறையூட்ட
சந்தோசத்தில்-
சிறகடிக்கும். . .
சிறு குருவிகள்.
ஸ்பரிசம் பட்டு-
திரும்பினாள்.
விளக்கு அணைந்து-
சுற்றிலும்
இருள் சூழ்ந்தது.
இரைச்சலுடன்-
பேருந் தொன்று
தண்ணீரை சிதறிச் சென்றது.
அந்த வெளிச்சத்தில்-
சிரித்த நாணயங்கள்
இவள் கையில்.
விழிகள் கேட்டன
பாலுக்குத் தேறுமா! . .
மு. ஆ. பீர்ஒலி.
15.12.2011
No comments:
Post a Comment