வின்வெளியில்
மேகங்களின் ஊர்வலம். . .
நட்சத்திரங்களின் வழிகாட்டல்.
இளமையின் உச்சத்தில்
நளினமாய்
என்னருகில்-
இவள் அமர்ந்திருந்தாள்.
இளந்தென்றல்
வாசிப்பில்-
அவள் கருங்கூந்தல்
இழைந்து நெளிந்தது.
வெண் மேகங்கள்
நளினமாய். . .
ஊர்ந்து கொண்டிருந்தன.
வடைக் காற்று-
பிரசவித்தது.
மேகங்கள் முகம் கறுத்து
ஆர்ப்பரித்தன.
எனக்கருகாமையில். . .
இவள்-
கண்கள் சிவந்திருந்தாள்.
எதிரில்-
இலையைத் தொலைத்த
ஒற்றை மரம்.
தன் சிறகுகள்
படபடக்க. . .
தஞ்சமடைந்த சிறு பறவை.
இவள் இமைகள்
படபடத்தன.
முத்தொன்று. . .
கண்ணங்களில் உருண்டது.
அருகாமையில்
பெருகிய. . .
மேக கண்ணீர்த் துளிகள்
சிற்றோடையாய்-
நெளிந்தது.
அவள் மனதின்
நிர்வாணத்தை நேசித்து. . .
என்னை இழந்தேன்.
நீலப் பட்டு மெத்தை-
நிலவு
களங்கமின்றி வெளிப்பட்டது.
அந்த பிரகாசம்
குளிர்வித்தது.
அன்பின் முழுமையையும்
அருவியாய். . .
பொழிந்து கொட்டினாள்
முதன் முறையாய்
சிலிர்த்துப் போனேன்.
இவள்-
என் உயிரென
மனது படபடத்தது.
அந்த சிறு பறவை
சிற்றோடை
மேகப் பயணம்
பிரசவித்த-
நிலவு
அனைத்தும்
கலைந்து போயின.
திரும்பிப் பார்த்த பொழுது
இவள்-
தொலைந்து போயிருந்தாள்,
மனது வலித்தது,
மு. ஆ. பீர்ஓலி.
26.11.2011.
No comments:
Post a Comment