Tuesday 1 November 2011

ஒரு கவிதை அரங்கேறிக் கொண்டிருந்தது,


கடல் புரத்து ஈரம்
பனித்​ தென்றல்
மனதுக்குள் சில்​லென்றது.
வானம்
நீலம் பூசிக்​கொண்டிருந்தது.

அ​லைகள்
​மே​லெழுந்து
ஒன்​றை ​யொன்று. . .
தழுவிக்​கொண்டிருந்தன.

​மேற்கு தி​​சையில்
கடலுக்குள். . .
ஆதவன்
சங்கமித்துக் ​கொண்டிருந்தான்.

செங்கதிர் சிதறல்கள். . .
​பொன்னிற ​மேனியில்
புதிய இலக்கணம்
ப​டைத்துக் ​கொண்டிருந்தன.

ஆகாயம்
கு​​டை பிடிக்க
நட்சத்திரங்கள்
கண் சிமிட்டத் துவங்கின. . .

தி​ரை விலகி
புதினமாய். . .
​வெட்கி ந​கைத்த
நிலவுப் ​பெண்.

மென் உணர்வுகள்
இ​ழைந்து ​வெளிப்பாடு
இனி​மையாய்
ஒரு கவி​தை
அரங்​கேறிக் ​கொண்டிருந்தது,
                              மு. ஆ. பீர்ஓலி.
                                 29.10.2011  


No comments:

Post a Comment