கடல் புரத்து ஈரம்
பனித் தென்றல்
மனதுக்குள் சில்லென்றது.
வானம்
நீலம் பூசிக்கொண்டிருந்தது.
அலைகள்
மேலெழுந்து
ஒன்றை யொன்று. . .
தழுவிக்கொண்டிருந்தன.
மேற்கு திசையில்
கடலுக்குள். . .
ஆதவன்
சங்கமித்துக் கொண்டிருந்தான்.
செங்கதிர் சிதறல்கள். . .
பொன்னிற மேனியில்
புதிய இலக்கணம்
படைத்துக் கொண்டிருந்தன.
ஆகாயம்
குடை பிடிக்க
நட்சத்திரங்கள்
கண் சிமிட்டத் துவங்கின. . .
திரை விலகி
புதினமாய். . .
வெட்கி நகைத்த
நிலவுப் பெண்.
மென் உணர்வுகள்
இழைந்து வெளிப்பாடு
இனிமையாய்
ஒரு கவிதை
அரங்கேறிக் கொண்டிருந்தது,
மு. ஆ. பீர்ஓலி.
29.10.2011
No comments:
Post a Comment