வாரணமாயிரமாய்
சுயசோகங்களை
கலைந்து
வெளிப்படு. . .
பனித்திரை
விலகி
உதயமாகும்
ஆதவன் போல். . .
கண்களின் குளிர்ச்சி
அந்த விழிகளின்
சாந்த சொருபம்
வைகறைப் பொழுது
முன்பனிக் காலம்
இளந்தளிர்கள்.
வியாபித்திருக்கும்
பனித்திவலைகள். . .
மென்மையான ஸ்பரிசம்.
விழிமலர்களின்
அழகு. . .
எத்துனை முறை
தரிசித்திருப்பேன் ! . .
என் தோழியே . . .
சமுகப் பார்வை
தொலை நோக்கு. . .
மாறுபட்ட சிந்தனைகள்
உயரிய நோக்கம்
வட்டத்திற்குள்
சிறைபட்டனவே ! . .
மாறுபட்ட
சூழ்நிலைகள். . .
விழிமலர்களின்
கீறல்கள். . .
சுவாசிக்க முடியவில்லை
மறைத்து விடு.
என் தோழியே ! . .
அழுத்தமான
அந்த துக்கங்களை. . .
கண் மலர்களில்
தேக்கி. . .
பொசுக்கிடாதே.
மரித்துப்போன. . .
அந்த மொட்டுக்கள்
தளிர்க்கட்டும் வசந்தமாய். . .
மு. ஆ. பீர்ஒலி
08.10.2011
No comments:
Post a Comment