மழை பெய்து ஓய்ந்த
மந்தார வேளை.
கீழ் வானில்
பூக்கும் வானவில்
என்னவளின்
கருவிழிக் குவலையில்
பிரசவிக்கும் முத்து
கன்னங்களில் –
பரிணமிக்கையில்
வெளிப்படும் சுரங்கள்.
உன்னை-
தரிசிக்கும்
ஒவ்வொரு முறையும்
சிலிர்த்துப் போகிறேன்.
மு. ஆ. பீர்ஓலி. எம்.ஏ., பி.எல்.,
25 th Jan 2012
No comments:
Post a Comment