தேடல்கள்
விடியலை எதிர் நோக்கி !
தொலை தூரத்தில்
சிறு பறவையின் தவம்.
புரியாத நிகழ்வுகள் . . .
உண்மையைத்தேடி
மீண்டும்
அந்த பயணம்.
நீல நிற சமுத்திரம்
விளிம்பில்
மிருதுவான மெத்தை
ஈரகசிவு
மனதிற்குள் சிலிர்ப்பு.
உயரத்தில்
மெல்லிய கீறலாய் . . .
தூரிகையின் வர்ண கோலம்.
இயற்கை வரைந்த
அந்த ஓவியம்
இமைகளுக்குள்
சங்கமித்துக் கொண்டிருந்தது . . .
முடி திறந்த
விழிகள்
நிறமாறிக் கொண்டிருக்கும்
இந்த பிரபஞ்சம்
படர்ந்து விரிந்தது.
உணர்வுகள் விழித்துக் கொண்டது !
விம்மல்கள் மட்டும்
பெருகிக் கொண்டிருந்தன . . .
இருண்டு கிடந்தது சமுத்திரம்
பொய்முகங்களின் தரிசனம்
திரையிட்டது.
வெப்பத்தை கக்கிய
நிலவு
மனது கனத்தது . . .
மீண்டும் அந்த பயணம்
உண்மையைத்தேடி.
மு. ஆ. பீர்ஓலி.
17.09.2011
No comments:
Post a Comment