Saturday, 8 October 2011

TO THE DAME – I MET IN THE MEADOW


Autumn comes;
    Withers away my
    Fruitful dreams
Winter comes;
    drives away
    my pleasant thoughts
Spring comes;
    sums up all my
    present hopes
If Summer comes
    What will
    be my position ?...

Nothing in me,
    but for passion
I live mortal;
    who is immortal?..
Pleasant memories
    fear to face me
I still bear
    the soul for thee.
When do you come?
    then I immortal…

See we together
    golden ages
And sing we together
    Eden Notes
Arm in arm arrive
    at paradise.

Where Adam and Eve
    were imparadised
In one another’s arms;
    But thou art my heaven
In whom with all my
    Passion-
    Thy beauty is inter-woven.
Both will together
    view the world
And come to know
    but all are old:
Thou and I ever
    Ever be youthful
And will see
    the passing years.

Lend my ears
    But for your
    music notes,
    that will bring forth-
Manna dews;
But I see my heaven in you
Will thou come and
    share my views?

Why not melt thy
    Heart to me
Don’t you know my love?
    I bear for thee.
Sweety – Chant
    Come to my side
Sleep I, immortal
    on thy lap.

                 Mohamed Adam Peeroli
                     8 th October 2011



Friday, 7 October 2011

எங்கு சென்றிட்டாய் ? . .


கரு​மேகக் கூட்டங்கள்
உன் மதி முகத்​தை
சூழ்ந்து . . .
சி​றை ​செய்தாற்​போல்
​என் இ​மைக் கரங்கள்
கரு விழி​யை
கண்ணி​வைத்துப் பிடிப்பதற்கு
அப்பப்பா. . .

கயல்கள் இரண்டும்
விழித் தூண்டில்களில்
அகப்படாமல்
​மேவிடும் அ​லையாய்
இ​மைக் ​கோட்​டையில்
இன்ப ஊற்றுக்களில்
கிளித்தட்டு ஆடுகின்றன.

கனியிதழ் பிழியும்
மதுரச ​தேக்கத்தில்
மதி மயங்கி. . .
மயங்கி. . .
உன்னில்
எ​னையிழந்து
என்னில் உ​னைத்​தேடி !. . .

மதுரவாய் மலர்ந்து
மகரயாழ் ​மொழி ​பேசி. . .
காதல் மலர்கள்
கனவுக் ​கோட்​டையில்
நித்தில கீதமாய். . .
நீங்கா நி​னைவு.

கனியில் ​தேன் கலந்து
கரும்பில் பால் ​சேர்த்து
இனி​மை ​மொழியினளாய்
தனி​மையில்
துதிபாடும் தூயவ​ளே ! . .
என்னரு​கே
நீயிருந்தால்,

​தென்றலாய்
வந்து. . .
மனத் ​தேக்கத்தில்
சலசலக்கும். . .
நீர​லைகள்
காவியமாய்
எழில் கூந்தல்
குடி​கொள்ளும்
மனிமா​லை ​தொடுத்திடும்.

தேன் சு​வையும்
பாலும்
நல் அமுதும்
​தெவிட்டுதம்மா. . .
விழிக் கருவூலங்கள்
உதிர்க்கும் தத்துவங்கள்
உணரவில்​லை
உணர்த்தா​யோ ! . .

தத்துவப் ​பே​ழை
தவழ்ந்து வரும் தார​கை ! . .
பிள்​ளை ​மொழிக் ​கேட்க
​கொள்​ளை ஆ​சைதான்
இல்​லை​ யென்பா​யோ ?
இனியவ​ளே ! . .

இதயத்து ​சோ​லையில்
உதயத்தின் சீதனமாய்
பனிப் பூ பஞ்ச​ணை​யில்
படரும் ​செண்பக​மே ! . .

உன்-
இ​மைகள் படபடக்க
இதழ்கள் துடிதுடிக்க
க​டைக் கண்ணால்
நாண. . .
ந​கை யுதிர்க்கின்றாய்

நிலவாக குளிர்ந்​தேன்
​தென்றலாய் வந்தாய் !
பகலாய் காய்ந்​தேன்
உன்​னைப் பிரிந்து.

துள்ளும் மான்
துடிக்கும் மீன்
தழுவும் ​தென்றல்
த​ழைக்கும் பூங்​கொடி.

எங்கு ​சென்றிட்டாய் ? . .
எந்தன். . .
இதய தார​கை நீ
என்னுள்​ளே. . .
குடியிருப்பாய்
என்​னை ​கொள்​ளையிட்டு,

                     மு. ஆ. பீர்ஒலி
                          05.10.2011