Saturday, 16 March 2013

நித்திரைப் பயணங்கள்---அணிந்துரை


 கவிஞர்கள் இரா. இரவி, கங்கை மகன், படைப்பாளி (நான் தேடும் வெளிச்சங்கள்) திருமதி. ஜோஜபின் பாபா, இணையப் பதிவர்கள் திருமதி. சுபி நரேந்திரன், செல்வி. புனிதா வெள்ளைசாமி ஆகியோரது அணிந்துரையை வாசிப்பதற்கு இந்த இணையத்தைப் பயன்படுத்தவும்.

                                                                                               நன்றி,
                                                                                             அன்புடன்,    மு.ஆ. பீர்ஒலி
  
Niththiraip Payanangal

Monday, 12 March 2012

கனவே உன்னைத்தான் நேசிக்கிறேன்


கனவு
உயிர் ஓவியமாய்
பிரசவித்தாள்.
நி​னைவு
காகிதப் பூவாய்
உதிர்ந்து ​போனாள்.

                           m.a. peeroli

நிசப்தம்


அவள்-
எழுதிய காவியத்​தை
காற்றில் க​​ரைத்து விட்டாள்.
அவனுக்குத்தான் வலித்தது.
இவள்-
விழிகள் அருளிய
கவி​தைத் ​தொகுப்பு
கானல் நீரில் க​​ரைந்து ​போனது
இவனுக்கு மட்டு​​மே ​வேத​னை.
                            
                                 m.a. peeroli

காதல்


விழிகள் ​கைக்​ கோர்த்து
மனத்​ ​தோட்டத்தில் உலா
துளி​ர்த்த அரும்புகள்-
மலரத் ​தொடங்கின.
                        m.a. peeroli

விடையெழுதா வினா. . .


பழனிச்சாமி
தன் ​பெண்சாதியிடம் ​கேட்டது
எப்​பொழுது-
இந்த சாதி மத சண்​டை ஒழியும்
அவள் ​​​மவுனமாய்ப் புன்ன​கைத்தாள்
                                         m.a. peeroli

திசை தெரியா பறவை


தஞ்ச​​மென்​று வந்தவ​ளை
பஞ்ச​னையில் புடம் ​போடும்
பாவ மயப் ​பொய்​கையில்
மான சிறு குருவி
மல்லாந்து மிதக்கிறது.
                           m.a. peeroli